அக்.1 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – இலங்கை அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு இலங்கையில் அக்டோபர் 1ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
இலங்கையில் வியாழக்கிழமை நிலவரப்படி, 11,817 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,98,694 ஆக உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்வு மற்றும் மருத்துவர்களின் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், தீவிரமான மூன்றாவது அலை கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தை தொடர்ந்து அரசாங்கம் ஊரடங்கை அக்டோபர் 1 வரை நீட்டித்து உள்ளது.
இந்தியாவில் ட்ரோன் தயாரிப்பில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு, ரூ.5,000 கோடி முதலீடு – மத்திய அரசு!
ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ஆகஸ்ட் 20 அன்று 10 நாள் ஊரடங்கை அமல்படுத்தினார். கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்படுவோர் மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கையில் முன்னேற்றம் இருப்பதாக சில அதிகாரிகள் கூறியதை அடுத்து செப்டம்பர் 21 அன்று ஊரடங்கு நீக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முறையாக அமலாகவில்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், இன்னும் அபாய மண்டலத்திலிருந்து நாடு வெளியேறவில்லை என்று கூறி சுகாதார அதிகாரிகள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தற்போது அக்டோபர் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டிற்கு மிகப்பெரிய வருவாயை உருவாக்கும் சுற்றுலாத் துறை, ஊரடங்கு காலத்தில் கடும் வீழ்ச்சியைக் கண்டது. நாட்டில் COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்த தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டதால் அதன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.