தமிழகத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு மாஸ்க் அணியாமல் வரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே முகக்கவசம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு மாஸ்க்:
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று காலத்தில் நோய் பரவலை தடுக்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிகளில் பின்பற்றபட வேண்டிய நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த நிலையிலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு தினந்தோறும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
TCS, Wipro & Infosys நிறுவனங்களில் வேலைவாய்ப்பு – ஊதிய உயர்வு விளக்கம்!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு ஓரிரு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களை தொற்றிலிருந்து காக்க நோய் தடுப்பு வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – செப்.18 தொடக்கம்!
அதன்படி பள்ளிக்கு மாஸ்க் அணியாமல் வரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே முகக்கவசம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் கொரோனா காலத்தில் ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.