அண்ணா பல்கலை கலந்தாய்வு, உயர்கல்வி மாணவிகளுக்கு ரூ.1000 – அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!

0
அண்ணா பல்கலை கலந்தாய்வு, உயர்கல்வி மாணவிகளுக்கு ரூ.1000 - அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!
அண்ணா பல்கலை கலந்தாய்வு, உயர்கல்வி மாணவிகளுக்கு ரூ.1000 - அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!
அண்ணா பல்கலை கலந்தாய்வு, உயர்கல்வி மாணவிகளுக்கு ரூ.1000 – அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!

தமிழக அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் மற்றும் நடப்பு ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு குறித்து மே 17 ஆம் தேதி கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.

முக்கிய தகவல் வெளியீடு:

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம் ஆகும். கொரோனா காலகட்டத்தில் பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் தாமதமாக பொறியியல் கலந்தாய்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், நீட் தேர்வு முடிந்ததும் பொறியியல் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு குறித்து மே 17ம் தேதி கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கை!

இந்த கலந்தாய்வில் எந்த ஒரு குளறுபடிகளும் ஏற்படாது ,ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தொலைந்து போன சான்றிதழை திரும்பப் பெற பழைய கட்டணமே வசூலிக்கப்படும், கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை என அமைச்சர் கூறினார். மேலும் அண்ணா பல்கலைக்கழகம், கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Exams Daily Mobile App Download

திமுக அரசு பொறுப்பேற்றதும் மகளிருக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதன்படி, மகளிர் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கலாம் என ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டின் போது, மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது, இத்திட்டத்தின்கீழ், ஆறு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும்.மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!