தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கை!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும், மத்திய அரசு ஊழியர்களை போல தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவது குறித்தும் தமிழக முதல்வர் தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது. கொரோனா காலகட்டத்தில் 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக இருந்தது. இதன் பின்பு மீண்டும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக உள்ளது. மேலும், திமுக ஆட்சியின்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 3வது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு உண்டு!

இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டிற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என பல பாதகமான அம்சங்கள் இடம் பெற்ற காரணத்தினால் மக்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் தான் வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரவில்லை. சட்டமன்ற தேர்தலின்போதும் திமுக ஆட்சியின் சார்பாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இந்த மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் இத்திட்டம் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்தும், அகவிலைப்படி அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்தும், ஈட்டிய விடுப்பு குறித்து அனைத்து துறை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தகுந்த தீர்வு காண வேண்டும் என தமிழக முதல்வர் மு. க ஸ்டாலினுக்கு தலைமைச்செயலக சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!