தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – மார்ச்சில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கான நலத்திட்டங்கள் பல அறிவித்து இருக்கின்றனர். அந்த வகையில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கட்டாயம் வழங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
குடும்பத்தலைவி உதவித்தொகை:
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்து வந்தது. அதன் படி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை கைப்பற்றியது. தேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்ன பல நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பல இடங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
Post Office சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வட்டி விகிதங்கள்!
அப்போது திருக்கோவிலூர் பகுதியில் பிரச்சாரம் செய்யும் போது அவர்கள் கூறியதாவது, திருக்கோவிலூர் எனது சொந்த ஊர் அதை விழுப்புரம் போல மாற்ற வேண்டும் என்பது என் ஆசை என தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்யும் இந்த காலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுதலாக இருக்கும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியான அரசு பஸ்சில் இலவச பயணம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி ?
அது போல குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் விரைவில் நிறைவேற்றப்படும். கட்டாயம் பெண்களுக்கு உதவி தொகை மார்ச் மாதத்திற்குள் வழங்கப்படும் என தெரிவித்த அவர் திருக்கோவிலூர் பகுதிகளை முன்னேற்ற திமுக செய்துள்ள நலத்திட்டங்களை பற்றி பேசினார். திருக்கோவிலுார் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளை வெற்றிபெற வைக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார்.