அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி ?
இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு இன்றியமையாதது. பெரும் பணக்காரர்கள் முதல் சாதாரண மக்கள் வரை முக்கிய ஆவணமாக செயல்பட்டு வரும் ரேஷன் அட்டையில் மனைவி மற்றும் குழந்தையின் பெயரைச் சேர்ப்பது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
புதிய உறுப்பினர் பெயர் சேர்ப்பது எப்படி:
இந்தியாவில் ஆதார் மற்றும் பான் அட்டையை போலவே மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று ரேஷன் கார்டு. இந்த ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்கள் மலிவான விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர்.மேலும் மக்களின் அனைத்து தேவைகளுக்கும் தற்போது ரேஷன் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்வகை ரேஷன் கார்டுகள் குடும்பத்தின் வருவாயை பொறுத்து ரேஷன் கார்டு 5 வகைகளில் உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியம். ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!
அதே போல், ரேஷன் கார்டில் புதிய குடும்ப உறுப்பினர் பெயரைச் சேர்க்க வேண்டியது அவசியம்.இந்நிலையில் ரேஷன் அட்டையில் குழந்தையின் பெயரை சேர்க்க வேண்டும் எனில், அதற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் கார்டு. குழந்தைக்கு ஆதார் கார்டு இருப்பின் அந்த ஆதார் கார்டு என அனைத்தும் அவசியம் ஆகும். இதனை தொடர்ந்து புதிதாக திருமணமான பெண்ணாக இருப்பின், திருமண சான்றிதழ், அவரின் ஆதார் அட்டை, பெற்றோரின் குடும்ப அட்டை, பெற்றோர் அட்டையில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட சான்று உள்ளிட்டவை தேவைப்படும்.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – திருப்புதல் தேர்வு விடைத்தாள் திருத்தம்!
மேலும் பெண் உறுப்பினர்களின் ஆதார் அட்டையில் கணவரின் பெயர் இருக்க வேண்டும். இந்த வகையில் ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழகத்தின் உணவு விநியோகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.