தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு – ரூ.1000 கோடி ஒதுக்கீடு!
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து கடந்த ஆண்டு சட்டசபையில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் தள்ளுபடி பெற தகுதியானவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை அரசு அறிவித்தது. அதனால் தற்போது 13 லட்ச பேர் மட்டுமே தள்ளுபடிக்கு தகுதியான நபர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகைக்கடன் குறித்த அறிவிப்பு ஒன்று பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து தமிழக முதல்வர் சட்டசபையில் விதி 110 என்பதன் கீழ் அறிவித்திருந்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் நகைக்கடனுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். இந்த முறைகேடுக்கு வங்கி அதிகாரிகள் உட்பட உடந்தையாக இருப்பது தெரிய வந்தது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
மேலும் இதில் போலி நகைகளை கொண்டு கடன் பெறுவது, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டது. அதனால் தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தற்போது 48 லட்சத்து 85 ஆயிரம் நபர்கள் நகைக்கடன் தள்ளுபடி விண்ணப்பித்தவர்களில் 13 லட்சத்து 30 ஆயிரம் பேர் மட்டுமே தள்ளுபடி பெற தகுதியான நபர்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படாமல் உள்ளது.
TN TRB கல்லூரி விரிவுரையாளர் தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. இதில் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அரசின் வாக்குறுதிகள் இடம்பெறும். அதன்படி வேளாண் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் குறித்த அறிவிப்பு ஒன்று பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. இதில் நிதியமைச்சர் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள், வேளாண் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதனால் விரைவில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்பதால் பயனாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். அத்துடன் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்துக்கும் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.