தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இரண்டாம் கட்ட பொது மாறுதல் கலந்தாய்வு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அரசு பள்ளி கலந்தாய்வு:
தமிழகத்தில் கடந்த 2 வருடமாக பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் வருடம் தோறும் ஆசிரியர்களுக்கு நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்படவில்லை. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதல் வழக்கம் போல பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை பூர்த்தி செய்ய ஆசிரியர் தகுதித்தேர்வுகளை நடத்த கோரிக்கைகள் எழுந்தது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு – ரூ.1000 கோடி ஒதுக்கீடு!
மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுகளை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இது குறித்து கலந்தாலோசிக்கபட்டு கடந்த மாதம் முதல் பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறையில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
இதனையடுத்து விரைவில் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்திற்குள் பணி நிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக மாவட்ட வாரியாக உபரி ஆசிரியர்கள் பட்டியல் பெறப்பட்டு வருகிறது என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.