மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 100 சதவீதம் பணிக்கு திரும்ப உத்தரவு!
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் இன்று (07.02. 2022) முதல் மத்திய அரசு ஊழியர்கள் 100% அலுவலகம் வந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள்:
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும் ஊரடங்குகளையும் விதித்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க பல மாநிலங்கள் இரவு நேர மற்றும் வார இருந்து நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அந்த வகையில் தனது ஊழியர்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க, மத்திய அரசு ஊழியர்கள் 50% ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வந்து பணிபுரிய உத்தரவிட்டது.
மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிப்பு – பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு!
மேலும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பவர்கள் அலுவலகங்களுக்கு வருவதில் இருந்து விலக்கும் அளித்தது. அதனை தொடர்ந்து கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசின் கட்டுப்பாடுகள் மூன்றாம் அலை கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் பல் மாநிலங்களில் இரவு நேர மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவைகள் ரத்து செய்யப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 100% அலுவலகம் வந்து பணி புரியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினசரி இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!
நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு அலுவலகத்தில் ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும். கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றி 100% பணியாளர்கள் இன்று முதல் (07.02.2022) அலுவலகம் வந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது.