தமிழில் எழுத, படித்த தெரிந்தவர்களுக்கு ரூ.10000 சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழில் எழுத, படித்த தெரிந்தவர்களுக்கு ரூ.10000 சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழில் எழுத, படித்த தெரிந்தவர்களுக்கு ரூ.10000 சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழில் எழுத, படித்த தெரிந்தவர்களுக்கு ரூ.10000 சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் அருள்மிகு ஆதிகேசவ திருக்கோயிலில் ஆகம ஆசிரியர், தலைமையாசிரியர், சமையலர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்து அறநிலையத்துறை:

தமிழகத்தில் இந்து அறநிலயத்துறையின் கீழ் காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது தமிழக இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் அருள்மிகு ஆதிகேசவ திருக்கோயிலில் ஆகம ஆசிரியர், தலைமையாசிரியர், சமையலர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பின்வருமாறு காணலாம்.

பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி – ஜன.31 வரை ஊரடங்கு! அரசு அறிவிப்பு!

ஆகம ஆசிரியர் (01) பணியிடங்களுக்கு சம்பளம் ரூ.30,000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு கல்வித்தகுதியாக ஏதாவதொரு வேத ஆகம பாட சாலையில் (வைணவம்) 5 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வைணவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத ஆகம பாடசாலையில் 4 ஆண்டு பாடப்பிரிவில் படித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமையல்காரர் (01) பணிக்கு மாதம் ரூ.12,000 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு தகுதியாக தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் 50 மேற்பட்டவர்களுக்கு உணவு சமைப்பதில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சமையல் உதவியாளர் (01) பதவிக்கு ரூ.10,000 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு தகுதியாக தமிழில் எழுத, படிக்க மற்றும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க !

தலைமையாசிரியர்(01) பதவிக்கு ரூ.35,000 ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு தகுதியாக தமிழ் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று, பி.எட் முடித்திருக்க வேண்டும். மேலும் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in என்ற முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து செயல் அலுவலர் , அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் , ஸ்ரீ பெரும்புதூர் – 602 105, காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 28.01.2022 கடைசி நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய நேரில் சென்று அறிந்துகொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!