பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி – ஜன.31 வரை ஊரடங்கு! அரசு அறிவிப்பு!

0
பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி - ஜன.31 வரை ஊரடங்கு! அரசு அறிவிப்பு!
பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி - ஜன.31 வரை ஊரடங்கு! அரசு அறிவிப்பு!
பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி – ஜன.31 வரை ஊரடங்கு! அரசு அறிவிப்பு!

இந்தியாவில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து பாண்டிச்சேரியில் அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை விரிவாக பார்க்கலாம்.

கொரோனா பரவல்

இந்தியாவில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா பரவலின் 3ம் அலை தொடங்கியுள்ளது என்பது அறியப்படுகிறது. இதனால் தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநிலங்களில் அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு கால்நடை உதவியாளர் காலிப்பணியிடங்கள் 2022 – நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு!

இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து இருந்தது. அதனால் மாநிலத்திற்குள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவ நிபுணர்களுடன் புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பின் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு 50% மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்தாலும் முழு ஊரடங்கு கிடையாது – மாநில அரசு விளக்கம்!

மேலும் கோவில்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் நிகழ்வில் பக்தர்கள் இன்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மால்கள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், பார்கள், கலையரங்கம் போன்ற இடங்களில் 50% மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளில் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி பாதுகாப்பான முறையில் நேரடி வகுப்புகள் வழக்கம்போல் நடைபெற அனுமதி அளித்துள்ளது. அத்துடன் மாணவர்கள் முகக்கவசம் அணிவது மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!