TNPSC குரூப் 3, 4 & VAO காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தமிழ்மொழி தகுதித்தாள் பாடத்திட்டம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளின் மூலமாக தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தற்போது தமிழ்மொழி பாடத்திட்டம் குறித்த தகவலை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்மொழி தகுதித்தாள்
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளின் மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் TNPSC தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. அத்துடன் தற்போது அனைத்து போட்டி தேர்வுகளில் தமிழ்மொழி தகுதித்தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழ் மொழி தகுதித்தாளில் 40% மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழில் எழுத, படித்த தெரிந்தவர்களுக்கு ரூ.10000 சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளதால் இந்த ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணையை கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அறிவிக்கப்படும் என்று அறியப்படுகிறது. இதையடுத்து தமிழ்மொழி தகுதித்தாள் பாடத்திட்டம் எவ்வாறு கேட்கப்படும் என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் எழுந்தது. இது குறித்து TNPSC தேர்வாணையம் தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி – ஜன.31 வரை ஊரடங்கு! அரசு அறிவிப்பு!
இந்த தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை குரூப்-3, குரூப் 4, குரூப் 7-பி, குரூப் 8 போன்ற பதவிகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் தேர்வர்கள் இதனை பெற http://www.tnpsc.gov.in என்ற TNPSCஇன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். அதனால் தேர்வர்கள் அனைவரும் இந்த புதிய பாடத்திட்டத்தை பின்பற்றி தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.