கால்நடைகள் வீதியில் சுற்றினால் உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் – மாநகராட்சி அதிரடி!

0
கால்நடைகள் வீதியில் சுற்றினால் உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் - மாநகராட்சி அதிரடி!
கால்நடைகள் வீதியில் சுற்றினால் உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் - மாநகராட்சி அதிரடி!
கால்நடைகள் வீதியில் சுற்றினால் உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் – மாநகராட்சி அதிரடி!

திருச்சி சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மாநகராட்சியின் அறிவிப்பு:

தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு என்பது ஒரு தொழிலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போதைய காலத்தில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பவர்கள் அதை முறையாக பராமரிக்காமல் சாலைகளில் விட்டு விடுகின்றனர். இதனால் சாலைகளில் செல்லக் கூடிய பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். சுற்றித் திரியும் கால்நடைகளால் சுகாதாரத்திற்கு கேடு விளைகிறது. மாநகர சாலைகளில் கால்நடைகளை திரிய விடுவதால் வாகன ஓட்டிகள் பல நேரங்களில் விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் உண்டாகிறது.

தமிழகத்தில் சனிக்கிழமை (நவ.20) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

கூட்டம் கூட்டமாக மாடுகள், ஆடுகள் போன்ற கால்நடைகள் தெருக்களில் சுற்றித் திரிவதுடன், சாலையிலேயே அமர்ந்து உள்ளன. இதனால் அப்பகுதிகளில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. சில மாடுகள், நாய்கள் போன்ற விலங்குகள் பொதுமக்களை அச்சுறுதியும் வருகின்றனர். மேலும் பொது இடங்களில் கால்நடைகள் கழிவு இருப்பதால் அவை அசுத்தத்தையும், துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. கால்நடை உரிமையாளர்கள் கால்நடைகளை பாதுகாக்காமல் தெருக்களில் விடுவதால் அவை உணவின்றியும் நோய்த்தொற்று ஏற்பட்டும் இறக்கும் நிலைக்கு வந்து விடுகிறது.

கிடுகிடுவென உயரும் ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்! நகைப்பிரியர்கள் கவலை!

இந்த நிலையில் கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டும், பொது இடங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்கும் நோக்குடனும் திருச்சி மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சி மாநகராட்சியில் தெருக்கள் மற்றும் பொது சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கால்நடையின் உரிமையாளர்கள் 3 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தி கால்நடைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் திருச்சி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!