மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? நிலுவையில் உள்ள DA குறித்த புதிய தகவல்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? நிலுவையில் உள்ள DA குறித்த புதிய தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? நிலுவையில் உள்ள DA குறித்த புதிய தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? நிலுவையில் உள்ள DA குறித்த புதிய தகவல்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை குறித்து வரும் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு பண்டிகைக்கு முன்னதாக அதாவது டிசம்பர் மாதத்தில் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு

இப்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகையை 31% ஆக உயர்த்திய பிறகு 4 தவணைக்கான DA தொகையை அரசாங்கம் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 18 மாதங்களாக நிலுவையில் உள்ள DA தொகையை வழங்குவதற்கான முடிவு இன்னும் அரசாங்கத்தால் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த அறிவிப்பு விரைவில் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களின் DA நிலுவைத் தொகை குறித்து கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டுக்கு முன்னதாக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

கால்நடைகள் வீதியில் சுற்றினால் உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் – மாநகராட்சி அதிரடி!

இப்போது 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 31% DA உடன் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அதன் கீழ், 18 மாதங்களாக நிலுவையில் உள்ள DA தொகையை ஒரேமுறையாக கொடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக நேஷனல் கவுன்சில் ஆஃப் ஜாயின்ட் கன்சல்டேட்டிவ் மெஷினரி (JCM) செயலாளர் சிவா கோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் இந்த DA நிலுவை தொகை விவகாரம் குறித்து அமைச்சரவை செயலாளருடன் விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சனிக்கிழமை (நவ.20) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இப்போது நிதி அமைச்சகம், பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை, செலவினத் துறை அதிகாரிகளுடன் மேற்கொள்ளும் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், DA நிலுவைத் தொகையை மொத்தமாக வழங்குவது குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத் தொகை குறித்து சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், அரசுத் துறையில் லெவல்-1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,000 வரையும், லெவல்-13ல் உள்ள அரசு ஊழியர்களுக்கான DA தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!