அடுத்த ஒரு வாரத்திற்கு பள்ளி விடுமுறை அறிவிப்பு – தீ விபத்து எதிரொலி! நிர்வாகம் நடவடிக்கை!
தேசிய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டதாக தீப்தி அறக்கட்டளையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
பள்ளி விடுமுறை
சமீபத்தில் தேசிய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்கிற்கு அருகில் உள்ள பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளிக்கு ஒரு வாரமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது வடக்கு டெல்லியில் பால்ஸ்வா குப்பைக் கிடங்கு பகுதிக்கு அருகில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான கியான் சரோவர் பள்ளியில், கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கும் மேலாக காணப்பட்டு வரும் பெரும் தீ மாணவர்களிடையே பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அந்த பள்ளிக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
இது குறித்து பள்ளியை நடத்தும் தீப்தி அறக்கட்டளையின் இயக்குனர் சந்தோஷ் கூறுகையில், ‘அப்பகுதியில் அபாயகரமான புகையின் அடர்த்தியான அடுக்கு உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு சுவாசிக்க கடினமாக உள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் பனிமூட்டமாக உள்ளது. பார்வையும் குறைவாக உள்ளது. இப்போது, அடர்த்தியான புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் குழந்தைகள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பள்ளி ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
முன்னதாக, பல்ஸ்வா குப்பை கிடங்கில் கடந்த ஏப்ரல்.26ம் தேதியன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்ததும், 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. இப்போது தீயை அணைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பால்ஸ்வா குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவிடம் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கேட்டுக் கொண்டுள்ளார்.