இந்திய IT துறையில் 1,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு – ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் திட்டம்!
இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் அனைத்தும் டிஜிட்டல் மையமாகி விட்டதால் ஐடி துறை வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
ஐடி துறை:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாத காரணத்தால் அனைத்து வேலைகளையும் ஆன்லைன் மூலம் முடித்து விடுகின்றனர். கல்வி கூட தற்போதைய சூழலில் ஆன்லைன் மையமாகி விட்டது. அதனால் இந்த ஒன்றரை ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளன. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஐடி துறையின் இந்த வளர்ச்சியால் மென்பொருள் துறை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.
ஆதார் மையம் அமைக்க திட்டமா? கவனிக்க வேண்டிய சில முக்கிய விவரங்கள் இதோ!
தற்போது, கிட்டத்தட்ட 400 சதவீதம் அளவில் ஐடி பணியாளர்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. தற்போது ஐடி ஆட்கள் சேர்ப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. புதிதாக கல்லூரி முடித்துவரும் மாணவர்களுக்கே ஐடி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்குகின்றன. சென்ற ஆண்டில் மட்டும் 1.38 லட்சம் பேர் புதிதாக வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
நடப்பாண்டில் இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற பெரிய நிறுவனங்கள் புதிதாக 1 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்க திட்டமிட்டுள்ளன. மேலும் ஸ்டார்ட்அப் நிறுவனம் மற்றும் பிற மென்பொருள் நிறுவனங்கள் இந்த நிதி ஆண்டில் 70,000 பேர் புதிதாக பணிக்கு சேர்க்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பு மட்டுமல்ல ஊதிய உயர்வும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சுமார் 70 -120 சதவீதம் வரையில் ஐடி துறையில் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
I want this job only my experience.