நடப்பாண்டில் 1.21 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – இந்திய ஐடி நிறுவனங்களின் சாதனை!
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் மென்பொருள் வல்லுனர்களின் தேவை அதிகரித்துள்ளதால், நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 1.21 லட்சம் பணியாளர்கள் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஐடி நிறுவனங்கள்:
45 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களை கொண்ட மென்பொருள் தொழில் நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கிய துறையாகும். இதில் இந்திய ஐடி நிறுவனங்கள், பிபிஎம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களும் அடங்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐடி துறையின் பங்கு 1992-93 இல் 0.4 சதவீதத்திலிருந்து தற்போது 8 சதவீதமாக வளர்ந்துள்ளது. அதாவது, 1991 ல் $ 150 மில்லியனில் இருந்து $ 194 பில்லியனாக விரிவடைந்துள்ளது. இதனால் நாட்டில் அதிக வேலைவாய்ப்பையும் உருவாக்கியது.
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – திறந்தநிலை பல்கலைக்கழகம் விளக்கம்!
நாட்டின் முதல் 10 ஐடி நிறுவனங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சத்தில் இருந்து தற்போது 40% அதிகரித்து 14 லட்சமாக அதிகரித்துள்ளது. அதிலும் டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை கொண்டுள்ளது. எச்சிஎல் டெக் மற்றும் டெக் மஹிந்திரா நிறுவனங்கள் முறையே 1.76 லட்சம் மற்றும் 1.26 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனம் 5 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ளதால் மூலம் நாட்டின் முதல் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதிலும், நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் முதல் 10 ஐடி நிறுவனங்கள் இணைந்து 1.21 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளன. இது கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்ச எண்ணிக்கையாகவும். கோவிட் -19 தொற்றுநோய் மென்பொருள் சேவைகளுக்கு அதிக தேவையை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக 2019ம் ஆண்டில் முதல் 10 நிறுவனங்கள் 45,649 ஊழியர்களை நியமித்தது அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.