தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – திறந்தநிலை பல்கலைக்கழகம் விளக்கம்!
தமிழக அரசு சார்பில் செயல்படும் துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலமாக முறையாக பயின்றவர்கள் பதவி உயர்விற்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பு:
தமிழ்நாடு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மக்களின் நலனுக்காக பல்வேறு அரசுத்துறைகள் 1670ம் ஆண்டிலிருந்து நிறுவப்பட்டு வருகின்றன. இத்துறைகளின் தலைவராக மாநில முதலமைச்சரும், ஆலோசனை மற்றும் ஒழுங்குபடுத்த தலைமை செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். அரசு பொதுத்துறை நிறுவனமாகக் கொண்டு 1670ல் புதிய செயலகம் உருவாக்கப்பட்டது. அரசின் பொருளாதார நிலையை சீர்படுத்தும் இந்த துறைகளை கவனிக்க செயலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்கள் – ஆகஸ்ட் 10 கடைசி நாள்!
இந்நிலையில் கடந்த முறை தொலைதூர கல்வி மூலமாக பட்டப்படிப்பு படித்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களில் திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலமாக கல்வி பயின்றவர்களுக்கும் இந்த உத்தரவு செல்லுபடி ஆகுமா என குழப்பம் ஏற்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது. அதில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலமாக முறையாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு முடித்து இளங்கலை பட்டம் பெற்றவர்கள் TNPSC மூலமாக நியமனம் செய்ய செல்லுபடியாகும். மேலும் அவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்விற்கும் தகுதி உடையவர்கள் என தெரிவித்துள்ளது.