அட்சய திருதியையில் தங்கம் வாங்க நல்ல நேரம் – 12 ராசிக்காரர்களும் கவனத்திற்கு!

0
அட்சய திருதியையில் தங்கம் வாங்க நல்ல நேரம் - 12 ராசிக்காரர்களும் கவனத்திற்கு!
அட்சய திருதியையில் தங்கம் வாங்க நல்ல நேரம் - 12 ராசிக்காரர்களும் கவனத்திற்கு!
அட்சய திருதியையில் தங்கம் வாங்க நல்ல நேரம் – 12 ராசிக்காரர்களும் கவனத்திற்கு!

தமிழகத்தில் நாளை அட்சய திருதியை பண்டிகை நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். அன்றைய நாளில் பல சவரன் நகைகளை வாங்க முடியாவிட்டாலும், ஒரு கிராம் அளவிலான நகையாவது பொதுமக்கள் கட்டாயம் வாங்கிவிடுவார்கள் என்பது வழக்கம் ஆகும். தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளி நகைகளையும் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

நாளை தங்கம் வாங்க நல்ல நேரம்:

அட்சய திருதியை இந்து சமூக மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இந்த ஆண்டு (மே 3) நாளை அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் பொதுவாக தங்கம், வெள்ளி மற்றும் நகைகளை வாங்குவது வழக்கம். நாளை தங்கம், வெள்ளி வாங்கினால் பல மடங்காக பெருகும் என்பது ஐதீகம். எனவே பல காலகட்டங்களாக அட்சய திருதியை நாளில் பொதுமக்கள் தங்கம், வெள்ளி வாங்கி வருகின்றனர். இதனால் அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி விற்பனை அதிகம் இருக்கும். தங்கம் அணிவது சமூக அந்தஸ்து மதிப்பு, மரியாதை அழகு ஆகியவற்றிற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தங்க நகைகள் நம்மிடம் எதிர்மறை சக்தி இருந்தால் வெளியேற்றி நேர்மறை சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

தங்க நகைகள் அட்சய திருதியை நாளில் வாங்குவதை ஜோதிட ரீதியாக பார்க்கும் குரு என்ற சொல்லப்படும் வியாழ பகவான்தான் தங்கத்தின் அதிபதியாகத் திகழ்கிறார். பொன்னன் என்ற மற்ற ஒரு பெயரும் உள்ளது. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால் இவர்களது வீட்டில் தங்கம் இருந்து கொண்டே இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும் தங்கம் வாங்கும் யோகம் அதிகரிக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. நாளைய அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க,காலை 10.30 மணி முதல் 11 மணி வரையும் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரைக்கும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரைக்கும் இரவு 7 மணி முதல் 8 மணி வரைக்கும் நல்ல நேரம் ஆகும்.

அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி மட்டுமல்லாமல் சிப்பிகள், கோதுமை தானியம் ஆகியவைகளும் மக்களால் வாங்கப்படும். லக்ஷ்மிக்கு பிடித்த பொருளாக சிப்பிகள் கருதப்படுகிறது. எனவே அட்சய திருதியை நாளில் சிப்பி வாங்கி லக்ஷ்மியின் பாதத்தில் வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. இதையடுத்து கோதுமை அல்லது அரிசி போன்றவை வாங்குவதும் உகந்ததாக கருதப்படுகிறது. மேலும் அட்சய திருதியை நாளில் பானைகள், சங்குகள் வாங்குவது அதிர்ஷ்டம் தரும் என நம்பப்படுகிறது. எந்த ராசிக்காரர்கள் எந்தெந்த நாட்களில் நகை வாங்கினால் அதிகம் தங்க நகைகள் சேரும் என்ற ஐதீகமும் மக்களால் பின்பற்றபடுகிறது.

  • மேஷம் – ஞாயிறு ,வெள்ளி
  • ரிஷபம் – புதன், வெள்ளி
  • மிதுனம் – திங்கள், வியாழன்
  • கடகம் – ஞாயிறு, திங்கள், புதன்
  • சிம்மம், மகரம் – புதன் வெள்ளி
  • கன்னி – சனிக்கிழமை
  • துலாம் – திங்கள், வெள்ளி
  • விருச்சிகம் – சனிக்கிழமை
  • தனுசு – வியாழக்கிழமை
  • கும்பம் – புதன், வெள்ளி, ஞாயிறு
  • மீனம் – திங்கள், வியாழக்கிழமை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!