ஜீ தமிழ் ‘சர்வைவர்’ நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றியாளர் இவர் தான் – ரசிகர்கள் உற்சாகம்!
ஜீ தமிழ் சர்வைவர் நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், இந்த சீசனில் இவர் தான் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
சர்வைவர் நிகழ்ச்சி:
விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், தென்னிந்திய பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘சர்வைவர்’ நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி போல இல்லாமல் ஆப்பிரிக்க கடற்கரை பகுதியில் உள்ள எழில்மிகு சான்சிபார் தீவுகளில், போட்டியாளர்கள் எப்படி இயற்கையின் ஆற்றலை எதிர்கொண்டு 90 நாட்கள் தாக்குப்பிடித்து வாழப்போகிறார்கள் என்பதையே இந்த நிகழ்ச்சியின் மைய கருத்தாக இருக்கிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பலர் தங்களது பங்களிப்பை நல்ல முறையில் கொடுத்து வருகின்றனர். மேலும் சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்த போட்டியாளர்கள் தற்போது காட்டு வாசி வாழ்க்கையில் படும் கஷ்டங்கள் அனைத்தும் பட்டு போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் 90 நாட்கள் இருந்து வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.
வக்பு வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு – நவ.13ம் தேதி தேர்வு!
தற்போது சர்வைவர் நிகழ்ச்சியின் மொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்து விட்டது. அதில் இறுதி வரை போராடி இறுதி சுற்று வரை இருந்த போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சர்வைவர் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளர் நடிகை விஜயலட்சுமி என தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் புகழ் பெற்றுள்ளார்.