தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைகள் அடமானம் வைக்க ஒரு சில கட்டுப்பாடுகளை கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.
கூட்டுறவு வங்கி:
கூட்டுறவு வங்கிகள் பெரும்பாலும் உறுப்பினர்களின் வளங்களைப் பயன்படுத்தி உறுப்பினர்களின் நலனுக்காக நிறுவப்பட்டவை. உறுப்பினர்களுக்கு நியாமான விலையில் கடன் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதே கூட்டுறவு வங்கிகளில் நோக்கம் ஆகும். தமிழ்நாட்டில் 4,530 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 180 தொடக்கநிலை ஊரக வளர்ச்சி வங்கிகளும் செயல்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் மற்றும் தங்க நகைக்கடன்கள் வழங்கி வருகின்றனர்.
TCS, Infosys நிறுவன ஊழியர்களுக்கு புதிய உத்தரவு – மின் பற்றாக்குறை எதிரொலி!
அரசும் கூட்டுறவு வங்கிகளில் இருக்கும் நகைகடன் தள்ளுபடி செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் தனியார் வங்கிகளை விட குறைந்த சதவிகித வட்டி வசூலிக்கப்படும் என்பதால் தங்க நகைக்கடன் வாங்க பலரும் வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி அடகு கடை நடத்துவோர் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அதனை வெளியில் அதிக வட்டிக்கு கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அதுமட்டுமின்றி கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து கூட்டுறவு நிறுவனங்கள் அடகு கடை நடத்துபவர்களுக்கு கடன்கள் வழங்க கூடாது எனவும் அதை மீறி வழங்கினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை எச்சரித்துள்ளது. மேலும் இது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.