மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 வகையான பம்பர் பரிசு? பண்டிகை காலத்திற்கு முன் எதிர்பார்ப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, DA நிலுவைத் தொகை மற்றும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் வட்டி விகிதங்கள் ஆகியவற்றில் சில சலுகைகள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
DA உயர்வு
வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு சில பம்பர் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதாவது 2021 தீபாவளிக்கு முன்னதாக, அரசு ஊழியர்கள் 3 பெரிய பரிசுகளை பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முதல் பரிசு ஊழியர்களுக்கான DA தொகை 3%மாக மீண்டும் அதிகரிக்கப்படலாம் என தெரிகிறது. இரண்டாவதாக DA நிலுவைத் தொகை குறித்து அரசாங்கத்துடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையின் முடிவும் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
வக்பு வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு – நவ.13ம் தேதி தேர்வு!
மூன்றாவது பரிசு வருங்கால வைப்பு நிதி (PF) உடன் தொடர்புடையவர்களது கணக்கில் PF மீதான வட்டி வரவு வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது ஜூலை 2021 க்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) ஜனவரி முதல் மே 2021 வரையிலான தரவு 3 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. இந்த வகையில் 3 சதவிகித DA அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டும்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
இத்தகைய சூழ்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் தீபாவளிக்கு முன் தங்களுக்கான உதவித்தொகை கிடைக்கும் என்று நம்புகிறார்கள். தொடர்ந்து அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) 6 கோடிக்கும் அதிகமான கணக்கு வைத்திருப்பவர்கள் தீபாவளிக்கு முன்பாக ஒரு சலுகையை பெறலாம் என தெரிகிறது. அதாவது PF கணக்கு வைத்திருப்பவர்களின் வங்கி கணக்கில் வட்டி பணத்தை விரைவில் மாற்ற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனுடன் EPFO அமைப்பு, தனது சந்தாதாரர்களின் கணக்குகளுக்கு 2020-21க்கான வட்டி மாற்றத்தை விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.