ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் கதிர் வாழ்வில் ஜெயித்த உண்மை கதை – ரசிகர்கள் பாராட்டு!

0
ஜீ தமிழ் 'செம்பருத்தி' சீரியல் கதிர் வாழ்வில் ஜெயித்த உண்மை கதை - ரசிகர்கள் பாராட்டு!
ஜீ தமிழ் 'செம்பருத்தி' சீரியல் கதிர் வாழ்வில் ஜெயித்த உண்மை கதை - ரசிகர்கள் பாராட்டு!
ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் கதிர் வாழ்வில் ஜெயித்த உண்மை கதை – ரசிகர்கள் பாராட்டு!

கோயில் திருவிழாக்களில் குழுவாக நடனம் ஆடி வந்த கதிர் தற்போது தமிழகத்தில் முன்னணி சேனலில் பிரபலமாக உள்ள சீரியலில் முக்கிய நடிகராக கலக்கி வருகிறார். இவர் தனது வாழ்வில் முன்னேறி வந்த கதையை பற்றி இந்த பதிவில் காணலாம்.

விஜே கதிர்:

சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒருவர் நடித்து பெயரெடுத்து விட்டாலே அவர் மிகவும் பிரபலமாக மாறி விடுகிறார்கள். சின்னத்திரை அந்த அளவிற்கு மக்கள் வாழ்வில் ஒன்றி போய் உள்ளது. அந்த வகையில் தான் நடித்த ஒரு சீரியல் மூலமாக தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமாக மாறியவர் கதிர். இவர் சொந்த ஊரான கோயம்புத்தூரில் கோயில் திருவிழாக்களில் நடனம் ஆடி வந்துள்ளார். அதன் மூலம் அந்த நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். இதனை பார்த்து அந்த ஊரின் லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

“குக் வித் கோமாளி சீசன் 3” ப்ரோமோ பார்த்து புகழ் வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் உற்சாகம்!

அந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக இவர் நடத்தியதன் மூலம் ஜீ தமிழ் சேனலில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் நல்ல முறையில் பயன்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல பிரபமடைந்தார். இதனால் அந்த சேனலில் தொடங்கப்பட்ட ஒரு பெரிய சீரியலான செம்பருத்தி தொடரில் நடிக்க தொடங்கினார். ஹீரோவின் தம்பியாக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது வரையிலும் நல்ல வரவேற்புடன் சென்று கொண்டுள்ளது.

திடீரென கோபப்பட்ட ‘பாரதி கண்ணம்மா’ அகிலன் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

கதிரின் அப்பா லாரி டிரைவராகவும், அம்மா கட்டிட தொழிலாளியாகவும் வேலை செய்து வருகின்றனர். மிகவும் வறுமையான சூழ்நிலையில் இருந்து தற்போது நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளார். தனது இந்த உயர்விற்கு அவரது குடும்பம் தான் முக்கிய காரணம் என்றும், அவர்கள் தான் உந்துதலாக இருந்ததாகவும் கதிர் கூறியுள்ளார். இவருக்கு சீரியலில் நடிக்கும் போதே வெள்ளித்திரைக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த படங்களில் நடிக்க முடியவில்லை என்றும், நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் சினிமாவில் நடிப்பேன் என்றும் கதிர் கூறியுள்ளார். இவரது விடாமுயற்சியினை அறிந்து கொண்ட ரசிகர்கள் கதிருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!