செப்டம்பர் 22 க்குப் பிறகு இந்த வங்கிகளில் பணம் எடுக்க முடியாது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஜ) அறிவிப்பின் படி, செப்டம்பர் 22 ஆம் தேதி முக்கிய வங்கியின் செயல்பாடு நிறுத்தப்படும். இதுபோன்ற சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் பணத்தை டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு:
இதுவரை பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உரிமங்களை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. அதே போன்று, ரிசர்வ் வங்கி சமீபத்தில் மற்றொரு வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. புனேவைச் சேர்ந்த ரூபே கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ஆகஸ்ட் மாதம் ரத்து செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவைத் தொடர்ந்து, அந்த வங்கிச் சேவைகள் செப்டம்பர் 22 முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஜ), உத்தரவின் படி, ரூபாய் கோ-ஆப்பரேட்டிவ் வங்கியின் உரிமம் திரும்பப் பெறப்பட்ட உள்ளது. ஏனெனில் வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டும் திறன் இல்லாத காரணத்தால் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் இந்த உரிமம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் வாடிக்கையாளர்கள் பணத்தை டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ முடியாது.
தமிழகத்தில் மதுபான விற்பனைக்கு நீதிமன்றம் தடை? வெளியான அதிர்ச்சி தகவல்!
Exams Daily Mobile App Download
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இது 1949 இன் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவுகள் படி, 11(1) மற்றும் 22(3)(d) பிரிவுகள் 22(3)(a), 22(3)(b), 22(3)(c), 22(3)(d), மற்றும் 22(3)(e) இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 1961 ஆம் ஆண்டின் DICGC சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு, ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.5,00,000 வரையிலான வைப்புத் தொகை காப்பீட்டுக் கோரிக்கைக்கு உரிமை உண்டு.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்