தமிழகத்தில் மதுபான விற்பனைக்கு நீதிமன்றம் தடை? வெளியான அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் சீருடையில் மது அருந்துவது போல புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் அது குறித்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மது விற்பனைக்கு தடை:
‘மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு’, ‘மது அருந்துவதால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்’ என பல விழிப்புணர்வு வாசகங்கள் வந்தாலும், தமிழகத்தில் மது விற்பனை குறைந்தபாடில்லை. மதுவால் ஏகப்பட்ட குடும்பங்கள் சீரழிந்து நிர்கதியாகி குழந்தைகள் தவிக்கும் செய்திகளும் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் மேற்படியாக தமிழகத்தில் ஒரு சில பள்ளிகளில் மாணவ மாணவிகள் சீருடையுடன் மது அருந்தும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு சில பள்ளிகளில் தான் இப்படி நடக்கிறது என சொல்ல முடியாது காரணம், தினசரி ஒரு பள்ளியில் மாணவர்கள் மது அருந்தும் வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் இருப்பதால் அது காண்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் மது கடைகளின் நேரத்தை மாற்றி அமைத்தால் இது போன்ற பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழங்கி தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (செப். 12) விசாரணைக்கு வந்தது.
தமிழக 11, 12,ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அரசு தேர்வுகள் இயக்கம் முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்கள். மேலும் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்த அவர்கள், இந்த பிரச்சனைக்கு உடனே தீர்வு காணாவிட்டால் தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என தெரிவித்தனர். மேலும் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்க கோரிய வழக்கு 2 வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்