தமிழகத்தில் கோடை வெயிலால் விளைச்சல் மற்றும் வரத்து குறைவு – காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்வு!
கோடை வெயிலின் காரணமாக அனைத்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளின் விலை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.
காய்கறிகளின் விலை
கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெப்பச்சலனம் அதிகமாக இருந்து வருவதால் தமிழகத்தில் காய்கறிகளின் விளைச்சலும் பாதிப்படைந்துள்ளது. தக்காளி, முட்டைகோஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் தாறுமாறாக விலை உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த இரண்டு வாரங்களாக தான் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக ரூபாய் 20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி தற்போது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டே வாரத்தில் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் அருண் – இவருக்கு பதில் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக ரூபாய் 20 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த காலிஃப்ளவர் இந்த வாரம் ரூபாய் 40 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முட்டைக்கோஸ் கடந்த வாரம் ரூபாய் பத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்று ரூபாய் 30 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உருளைக்கிழங்கு கடந்த வாரம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூபாய் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வெங்காயம், கேரட், பீட்ரூட் போன்றவைகளின் விலை இரட்டிப்பாக குறைக்கப்பட்டுள்ளது.
வெங்காயம் கிலோ ரூபாய் 20 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது ரூபாய் 20 வரையிலும் பீட்ரூட் ரூபாய் 25 வரையிலும் விற்பனையாகி வருகிறது. கோடை வெயிலின் காரணமாக விளைச்சல் குறைவால் இந்த அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது சென்னைக்கு தேவையான காய்கறிகள் அனைத்தும் கோயம்பேடு வணிக சந்தைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சில்லரைக் கொண்டு செல்லப்படுகிறது. கோயம்பேடு வணிக சந்தைக்கு கொண்டு வரப்படும் காய்கறிகளின் வரத்து மிகவும் குறைந்து உள்ளதால் தக்காளி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு போன்றவைகளின் விலை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.