மாநிலம் முழுவதும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை அறிவிப்பு – அச்சத்தில் பொதுமக்கள்!
நாட்டில் ஒரு சில மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று (ஜூலை 18) மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை அறிவிப்பு:
மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் கனமழை வார இறுதி நாட்களில் குறைந்தது ஆனால் வானிலை ஆய்வு மையம் நேற்று மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல முக்கிய ஏரிகள் நிரம்பி இருக்கின்றது. தொடர் மழை காரணமாக இரண்டு பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் இருக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
CBSE பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? கல்வி வாரியம் விளக்கம்!
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 104 செ.மீ மழை பதிவாகி இருப்பதாக பேரிடர் மேலாண்மைக் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் முக்கிய ஏரியின் நீர்மட்டம் தற்போது 82 சதவிகிதமாக இருக்கிறது. மும்பைக்கு தண்ணீர் வழங்கும் ஏழு ஏரிகளின் மொத்த இருப்பு 11.88 லட்சம் மில்லியன் லிட்டர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரின் தண்ணீர் பற்றாக்குறையை குறைக்க அக்டோபர் 1ம் தேதிக்குள் ஏரிகளில் 14.47 லட்சம் மில்லியன் லிட்டர் தண்ணீர் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கடந்த 2020 ஆம் ஆண்டு ஏழு ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 26 சதவிகிதமாக இருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு மொத்த நீர் இருப்பு 2.26 லட்சம் மில்லியன் லிட்டராக இருக்கிறது. மேலும் கட்சிரோலி பகுதியில் பெய்த கனமழை காரணமாக அந்த பகுதிகளில் வெள்ள நீர் அதிகமாக இருந்தது. அது மட்டுமில்லாமல் கோதாவரி மற்றும் இந்திராவதி ஆறுகள் அபாய கட்டத்தை தாண்டி சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.