நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? வேகமாக பரவும் எக்ஸ்இ வைரஸ்!
இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில் ஓமைக்ரான் வைரஸை விட எக்ஸ்இ தொற்று வேகமாக பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் மீண்டும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமோ என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
முழு ஊரடங்கு
இந்தியாவில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய வகையான ஓமைக்ரான் தொற்று காரணமாக கொரோனா வைரசின் 3ம் அலை பரவ தொடங்கியது. மேலும் இது டெல்டா வகை வைரசை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று ஆய்வாளர்கள் எச்சரித்தனர். அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி தற்போது கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு சேர்க்கை – அதிகாரிகள் விளக்கம்!
தற்போது தான் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ தொற்று வேகமாக பரவி வருகிறது. இது கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தில் முதன் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்இ வைரஸ் ஓமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பு என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலும் இது போன்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இது அதிவேமாக பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது குறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்ததாவது, ஒமைக்ரானின் புதிய வகையான எக்ஸ்இ வைரஸ் ஓமைக்ரான் வைரசை விட 10% வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மீண்டும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அத்துடன் ஓமைக்ரான் வைரஸ் விட அதிவேகமாக பரவும் என்பதால் மீண்டும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.