இந்தியாவில் பரவும் XE வகை கொரோனா – மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா?
இங்கிலாந்து நாட்டில் ஒமைக்ரான் பிஏ1 (BA.1) மற்றும் பிஏ2 (BA.2) ஆகிய இரண்டு வைரஸ் கலப்பான ‘எக்ஸ்இ’ தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் குஜராத்தில் 67 வயது முதியவருக்கு புதிய வகை கொரோனா மாறுபாடான XE தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.
மீண்டும் முழு ஊரடங்கு:
இந்தியாவில் கொரோனா 2வது அலை தாக்கம் முதல் அலையை விட அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த வேளையில் அனைத்து மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வேளையில் மீண்டும் ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை தொடங்கியது. இதன் பரவல் வேகம் அதிகமாக இருந்தது, ஆனால் நோய் தாக்கம் குறைவாக இருந்தது. மேலும் அமலில் இருந்த ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. கொரோனா மூன்றாவது அலைக்கு ஒமைக்ரான் தொற்று முக்கிய காரணமாக அமைந்தது.
Accenture நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
நாடு முழுவதும் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் புதிய வகை கொரோனா பரவத் தொடங்கி உள்ளது. இதை அடுத்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஒமைக்ரான் வகை தொற்றின் திரிபான XE வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வகை தொற்று ஒமைக்ரானை விட அதி வேகமாகப் பரவக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த 67 வயது முதியவர் ஒருவருக்கு கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி ஒமைக்ரான் திரிபான எக்ஸ்.இ வகை தொற்று கண்டறியப்பட்டு, பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. முன்பு மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு எக்ஸ்.இ வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது, பரிசோதனையில் புதிய வகை கொரோனா தொற்றில்லை என்பது தெரிய வந்தது. இந்தியாவிலேயே முதல் முறையாக குஜராத் மாநிலத்தில், எக்ஸ். இ வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த எக்ஸ்இ தொற்றால் பாதிக்கப்பட்டால் பொதுவாக சளி, தும்மல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்படுவதாகவும், வீரியம் குறித்து இன்னும் ஆராயப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.