மூன்றாம் உலகப்போர் தொடக்கம்? உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி கட்டிடத்தில் குண்டுவீச்சு! தொடரும் பதற்றம்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான விவகாரத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மழலையர் பள்ளி கட்டிடம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவி வருகிறது.
போர் பதற்றம்:
அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் ரஷ்யா தங்கள் உள்நாட்டின் பாதுகாப்புக்கும், கிரிமியாவின் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுகிறது. இந்நிலையில் உக்ரைன் எல்லையில் ஒரு லட்சம் படை வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் படையெடுப்பு நடக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது.
மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு – நிதித்துறை அமைச்சர் விளக்கம்!
தற்போது டான்பஸ் மாகாணத்தின் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டானிட்சியா, லுகன்சா நகரில் உள்ள ஒரு கிராமத்தில் திடீரென குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவி வருகிறது. குண்டு வீச்சு தாக்குதலினால் மழலையர் பள்ளியின் கட்டடம் பாதிக்கப்பட்டுள்ளது. டான்பஸ் உக்ரைனின் எல்லைப்பகுதியில் உள்ள மாகாணமாக உள்ளது. டான்பசின் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
தமிழக இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு – அரசுக்கு வலியுறுத்தல்
பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஆசிரியர் நட்டாலியா செய்தியாளர்களிடம், குண்டு வெடிப்பின் போது பள்ளியின் ஜன்னல்கள் சிதறியதாகவும், ஆசிரியர் பல அடி தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டதாகவும், எங்கு பார்த்தாலும், புகை மூட்டமாக இருந்ததால் என்ன நடந்ததது என முதலில் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த தாக்குதல் காரணமாக பள்ளி ஊழியர்கள் சிலர் காயம் அடைந்திருப்பதாகவும் கூறினார். ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இந்த குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கிடைத்திருப்பதாக செய்திகள் தெரிவித்து வருகின்றன.