தமிழகத்தில் குழந்தைகளை பராமரிக்க பணி குழுக்கள் – அரசு அறிவிப்பு!!
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிக்கவும், கொரோனோ பாதித்த குழந்தைகளை பாதுகாக்கவும் அரசு மாவட்டங்கள் தோறும் பணி குழுக்களை அமைத்துள்ளது.
கொரோனா பணிக்குழு:
கொரோனா இராண்டாம் அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்புகள் புதிய உச்சம் தொட்டு வருகிறது அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், பாதிக்கபட்ட மக்களுக்கான உதவிகளையும் தொடந்து செய்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களுக்கு உதவி தொகைகளையும், நிவாரணங்களையும் அளித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் வைரஸ் தாக்கம் அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதன் தொடர்ச்சியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளை கவனிக்க அரசு பணி குழுவை அமைத்துள்ளது. கொரோனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள், கொரோனா தொற்றுள்ள குழந்தைகள் போன்றோர்களுக்கு வழங்கும் செயல்களை பணிக்குழு மேற்கொள்ளும் என அரசு தெரிவித்துள்ளது. பெற்றோரை இழந்த அல்லது கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள் தத்தெடுப்பு, வளர்ப்பு, பராமரிப்பு, நிதி ஆதாரத்தை கவனித்தல் உள்ளிட்டவைகளை இந்த பணி குழுக்கள் செய்யும்.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் பரவல் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!!
மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனைகளையும் இக்குழு வழங்கும். பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் குழந்தைகளை அவர்களுக்கென உள்ள இல்லத்தில் தற்காலிகமாக பராமரிக்கும் பணியையும் இந்த பணிக்குழு மேற்கொள்ளும். கொரோனா தொற்றுள்ள குழந்தைகளுக்கு சிகிக்சை பணியையும் தொடர்ந்து கண்காணிக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குழந்தைகள் மையத்தை தேர்வு செய்து அதன் மூலம் குழந்தைகளை அக்குழு பாதுகாக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
Enakku interst ….yarai contact pantrathu