பிரபல ஐடி நிறுவனத்தின் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைப்பு? இனி WFHக்கு வாய்ப்பில்லை!
தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்த நிலையில், Wipro நிறுவனம் WFH முறையை பின்பற்றி வருகிறது. இந்த நிலையில், Wipro நிறுவன Chairman இது தொடர்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.
Work From Home
கொரோனா கால கட்டத்தின் போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக ஐடி துறையினர்கள் வீட்டில் இருந்தவாறு பணி செய்ய வேண்டும் என ஐடி நிறுவனங்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து படிப்படியாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் இதில் சில நிறுவனங்கள் Work From Home நடைமுறையே பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், Wipro நிறுவனம் Work From Home நடைமுறையை பின்பற்றி வருகிறது. இந்த நிலையில், இந்நிறுவன Chairman Work From Home தொடர்பாக கூறியதாவது, 3 ஆண்டுகளுக்கு முன்பாக virtual model வேலையானது ஊழியர்கள் ஒருவருக்கொருவர் நட்புறவு கொண்டதால் செய்ய முடிந்ததாக தெரிவித்துள்ளார்.
புழல் சிறையில் கைதிகளுக்கு இந்த வசதிகள் எல்லாம் இருக்கா? வெளியான ஷாக் அப்டேட்!
மேலும் தற்போது தொழில் நுட்பங்கள் எவ்வளவு தான் வந்து விட்டாலும், நேரில் உரையாடுவது போன்ற இருப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது ஒரு நேரடி நண்பருக்கும் மற்றும் Facebook நண்பருக்கும் வித்தியாசம் இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார். இதிலிருந்து, இனி Wipro நிறுவனமும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும் என தெரிகிறது.