புழல் சிறையில் கைதிகளுக்கு இந்த வசதிகள் எல்லாம் இருக்கா? வெளியான ஷாக் அப்டேட்!

0
புழல் சிறையில் கைதிகளுக்கு இந்த வசதிகள் எல்லாம் இருக்கா? வெளியான ஷாக் அப்டேட்!
புழல் சிறையில் கைதிகளுக்கு இந்த வசதிகள் எல்லாம் இருக்கா? வெளியான ஷாக் அப்டேட்!
புழல் சிறையில் கைதிகளுக்கு இந்த வசதிகள் எல்லாம் இருக்கா? வெளியான ஷாக் அப்டேட்!

ஆசியாவிலேயே பெரிய சிறைச்சாலை திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புழல் சிறைச்சாலை ஆகும். இந்த சிறையில் டி.ஐ.ஜி.யாக அம்ரீஸ் பூஜாரி நியமிக்கப்பட்ட நிலையில் சிறையில் பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

புதிய வசதிகள்

கடந்த 2006 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் புழல் சிறைச்சாலையை அன்றைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்த சிறை 221 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நிலையில் 3000க்கு அதிகமான கைதிகளை அடைக்கும் வசதி இங்கு இருக்கிறது. இந்நிலையில் இந்த சிறையில் புதிய சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக அம்ரீஸ் பூஜாரி பொறுப்பேற்றார். அதன் பின் பல சிறப்பு வசதிகள் சிறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

அதன் படி, புழல் சிறையில் நேர்காணல் செய்திடும் அறையில் சிறைவாசிகளிடம் உறவினர்கள் பேசுவதற்கு இன்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சிறை பாதுகாப்பை அதிகரிக்க 5 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலமாக ஏசி, ஹோம் அப்ளையன்சஸ், வெல்டிங் மெஷின் போன்றவைக்கான 3 மாத கால பயிற்சி ஆண் சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

NIFT மத்திய அரசு துறையில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அதே போல பெண் சிறைவாசிகளுக்கு தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி வழங்கி சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் மூலமாக வாய்ப்பாட்டு பயிற்சி மற்றும் இதர இசை கருவிகள் வாசிப்பு போன்ற பயிற்சி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!