இனி ஆபீஸ் போக வேண்டியது தான்.. ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விப்ரோ!
ஒரு சில ஐடி நிறுவனங்கள் கொரோனா பரவல் குறைந்த பிறகும் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு பணி புரியுமாறு அறிவுறுத்தினர். இந்த நிலையில் தற்போது விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐடி ஊழியர்கள்
இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் வளர்ச்சியை தக்க வைத்து கொள்ள ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு பணி செய்யுமாறு அறிவுறுத்தி வந்தனர். அதன்படி தற்போது ஒரு சில ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு (WFH) பணி செய்வதற்கு அனுமதி அளித்துள்ளனர். அதே சமயம் வேறு பிற ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி படிப்படியாக அலுவலகம் வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன.
Follow our Instagram for more Latest Updates
சில நிறுவனங்கள் ஹைபிரிட் மாடல் என்ற நடைமுறைப்படி சில நாட்கள் வீட்டில் இருந்தும் சில நாட்கள் அலுவலகத்தில் இருந்தும் பணி புரியும் நடைமுறையை பின்பற்றி வருகின்றன. இதில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிவதையே விரும்புகின்றனர். மேலும் அவ்வப்போது ஊழியர்கள் மூன்லைட்டிங் முறையில் பணி செய்து வருகின்றனர். மேலும் இம்முறையில் பணி செய்பவர்களை பல்வேறு நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வருகின்றனர். அதனால் விப்ரோ நிறுவனம் தற்போது தங்களின் ஊழியர்களை அலுவலகத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
சென்னையில் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை – பயணிகள் ஹாப்பி!
Exams Daily Mobile App Download
மேலும் இது தொடர்பாக விப்ரோ நிறுவனத்தின் தலைவர் கூறியிருப்பதாவது, தங்களின் ஊழியர்களை சிறிது நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரியுமாறு தெரிவித்துள்ளார். அதன்பின்பு மீண்டும் வீட்டில் இருந்து பணி செய்வது தொடரலாம் எனவும் கூறியுள்ளார். ஆனாலும் இந்த நடைமுறையானது நீண்ட நாட்கள் தொடருமா? என்பது கேள்விக்குறியே. அப்படியே தொடர்ந்தாலும் WFH மற்றும் ஹைபிரிட் நடைமுறைக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.