சென்னையில் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை – பயணிகள் ஹாப்பி!

0
சென்னையில் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை - பயணிகள் ஹாப்பி!
சென்னையில் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை - பயணிகள் ஹாப்பி!

சென்னையில் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை – பயணிகள் ஹாப்பி!

சென்னையில் மெட்ரோ ரயிலில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் வரவுள்ள தீபாவளி பண்டியை முன்னிட்டு பயணிகளுக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

மெட்ரோ ரயில்:

தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டது. இந்த ரயில்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பணிக்கு செல்பவர்கள் வரை தினந்தோறும் ஏராளமான மக்கள் பயணித்து வருகின்றனர். நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரயில்கள் மூலம் பயணிகள் எளிதாகவும் விரைவாகவும் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடிகிறது.

Follow our Instagram for more Latest Updates

கடந்த சில மாதங்களாக தினமும் 1.50 லட்சம் முதல் 1.80 லட்சம் பேர் பயணம் செய்து வருவதாக நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இதனையடுத்து மெட்ரோ ரயில் சேவையை மாநகர் முழுவதும் விரிவுபடுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இன்று (அக்.20) முதல் 22 ஆம் தேதி வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்? கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்!!

Exams Daily Mobile App Download

தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்கள் கடை வீதிகளுக்கு சென்று வருவர், வெளியூர்களுக்கு பயணம் செய்வர். அதனால் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலானோர் ரயில்களில் பயணிப்பர். அதனால் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் அக்.20,21,23 ஆகிய மூன்று தினங்களும் தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!