நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்? கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்!!
உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் இந்த நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வருகிறது. மேலும் இது தொடர்பான தகவல்களை பார்ப்போம்.
கொரோனா கட்டுப்பாடுகள்
உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு கோடிக்கணக்கான உயிர்களை பறித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பூசி மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அதனால் கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவலில் இருந்து படிப்படியாக மீண்டு வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில், கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா பரவலானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பெரு நகரங்களில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பொது இடங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க உள்ளதாக முடிவு செய்துள்ளது.
தமிழக திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயர்வு – உரிமையாளர் சங்கம் கோரிக்கை! முதல்வருக்கு கடிதம்!
Exams Daily Mobile App Download
மேலும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளான திரையரங்குகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள், ஜிம்கள் ஆகிய இடங்களில் வரும் வாடிக்கையாளர்களை கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலால் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயருகிறது. அதனால் இவர்கள் சிகிச்சை பெறுவதற்கு ஷாங்காய் நகரின் அருகில் இருக்கும் ஒரு சிறிய தீவில் 3,250 படுக்கைகள் கொண்ட தங்கும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.