Wipro நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – பட்டதாரிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

0
Wipro நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் - பட்டதாரிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!
Wipro நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் - பட்டதாரிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!
Wipro நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – பட்டதாரிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது Wipro நிறுவனமும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து TCS, Wipro, Infosys, HCL உள்ளிட்ட நிறுவனங்கள் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அத்துடன் இந்நிறுவனங்கள் நேர்முக தேர்வு மூலமாக ஐடி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தகுந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு பணியமர்த்தப்படுகின்றனர். இதையடுத்து Wipro நிறுவனம் Off Campus மூலமாக காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த Off Campus ஆனது Elite National Talent Hunt 2.0 என்று அழைக்கப்படும் என Wipro நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 15 வரை 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

இதில் அதிகமான அளவு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் நாடு முழுவதும் உள்ள திறமையான இன்ஜினியரிங் மாணவர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு முழு நேர பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதாவது பகுதி நேரமாக படித்தவர்கள், தொலைத் தூர கல்வி மூலமாக படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அத்துடன் BE, ME, B.Tech., M.Tech., போன்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆனால் பேஷன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் இன்ஜினியரிங், விவசாயம் மற்றும் ஃபுட் டெக்னாலஜி போன்ற துறைகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்க கூடாது. மேலும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் 2020 மற்றும் 2021, 2022ம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்களாக இருத்தல் வேண்டும்.

ஜனவரி 6 & 7 ம் தேதி அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

அத்துடன் 10, 12ம் வகுப்பு, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு போன்றவற்றில் உள்ள அனைத்து பாடங்களிலும் 60% மேலாக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வு ஆன்லைன் மூலமாக 128 நிமிடங்கள் தேர்வு நடத்தப்படும். இதில் ரிட்டர்ன் டெஸ்ட், கம்யூனிகேஷன் டெஸ்ட், ஆன்லைன் புரோகிராமிங், ஆப்டிடியூட் போன்ற வகையான தேர்வுகள் நடத்தப்படும். அதன் பின் நேர்முக தேர்வுக்கான தேதிகளை விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு மாத சம்பளமாக 3,50,000 ரூபாய் வரை வழங்கப்படும் Wipro நிறுவனம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற [email protected] என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!