8 & 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை – ஜன.20 கடைசி நாள்!
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் வேலையை இழந்து தற்போது வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் தொடர்ந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் பதிவு எழுத்தர் உள்ளிட்ட பதவிகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பணி குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பின்வருமாறு காணலாம்.
நிர்வாகம்: தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம்
- பணி: பதிவு எழுத்தர் (Record Clerk / Attender)
- காலியிடங்கள்: 02
- கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சம்பளம்: ரூ.15,900 – 50,400
பணி: அலுவலக உதவியாளர் (Office Assistant)
- காலியிடங்கள்: 13
- கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://tnwc.in/wp-content/
uploads/2021/12/tnwc_ application_form.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து கீழ் வரும் முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பலாம். - அனுப்ப வேண்டிய முகவரி: பொது மேலாளர், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கழகம், 82, அண்ணா சாலை, கிண்டி, சென்னை 600-032
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.01.2022
இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய https://tnwc.in/wp-content/uploads/2021/12/tnwc_application_form.pdf என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.