விஜய் டிவி “சூப்பர் சிங்கர்” வைல்ட் கார்ட் சுற்று முடிவுகள் – இறுதி போட்டிக்கு செல்லும் இருவர்!
விஜய் தொலைக்காட்சியில் 7வது சீசன் முடிந்து 8வது சீசனில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் கடந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக இரண்டு போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து மக்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. எத்தனை சீசன் தொடங்கினாலும் அதில் மக்கள் வரவேற்பு அருமையாக உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி இருக்கும் பலரும் நல்ல நிலைமைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது 8வது சீசன் தொடங்கப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்புடன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்களுக்கு அதிகம் பரீட்சையம் இல்லாத போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் அவர்கள் அனைவருமே நிகழ்ச்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டனர். அதிலும் மானஸி, ஸ்ரீதர் சேனா, முத்து சிற்பி, அபிலாஷ் போன்றவர்கள் அதிகம் ரசிகர்களை பெற்றுள்ளனர்.
“பாண்டியன் ஸ்டார்ஸ்” நடிகை மீனா பதிவிட்ட மகனின் புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி கொரோனா ஊரடங்கின் போது நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பல தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சின்ன குயில் சித்ரா, ஹரிகரன், எஸ்.பி சரண், சங்கர் மகா தேவன் என இசை ஜாம்பவான்கள் பலரும் வந்து போட்டியாளர்களை வாழ்த்தி அவர்களுக்கு நடுவர்களாகவும் இருந்துள்ளனர். இந்த சீசனில் ஏற்கனவே அணு, பரத், முத்து சிற்பி, அபிலாஷ் என 4 பேர் நேரடியாக இறுதி போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
சந்தியாவை வீட்டிற்கு அழைத்து வரும் சரவணன், சிவகாமி ஏற்றுக் கொள்வாரா? “ராஜா ராணி 2” ப்ரோமோ!
அவர்களுடன் இணைந்து இறுதி போட்டியில் கலந்து கொள்ள கடந்த வாரம் இதுவரை போட்டியில் கலந்து கொண்டு வெளியேறிய 10 போட்டியாளர்களுக்கு வைல்ட் கார்டு போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்று இரண்டு போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி இருவரும் வைல்ட் கார்டில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் மக்களிடம் நல்ல ஆதரவு உள்ளது. இறுதி போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.