சந்தியாவை வீட்டிற்கு அழைத்து வரும் சரவணன், சிவகாமி ஏற்றுக் கொள்வாரா? “ராஜா ராணி 2” ப்ரோமோ!

0
சந்தியாவை வீட்டிற்கு அழைத்து வரும் சரவணன், சிவகாமி ஏற்றுக் கொள்வாரா?
சந்தியாவை வீட்டிற்கு அழைத்து வரும் சரவணன், சிவகாமி ஏற்றுக் கொள்வாரா? "ராஜா ராணி 2" ப்ரோமோ!
சந்தியாவை வீட்டிற்கு அழைத்து வரும் சரவணன், சிவகாமி ஏற்றுக் கொள்வாரா? “ராஜா ராணி 2” ப்ரோமோ!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், அடுத்த வார எபிசோடில் நடைபெற உள்ள காட்சிகள் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ராஜா ராணி 2:

ராஜா ராணி 2 சீரியலில், கடந்த வாரம் சந்தியா விவாகரத்து கேட்கிறார் என தவறாக நினைத்த சரவணன் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். அவரை பஸ் ஏற்றி விட்டு பிரிய மனமில்லாமல் அதே பஸ்ஸில் ஏறி சந்தியாவிற்கு தெரியாமல் செல்கிறார். மற்றொரு பக்கம் குடும்பத்தினர் சந்தியா மீது எந்த பிரச்சனையும் இல்லை என தெரிந்து கொண்டு சந்தியாவும் சரவணனும் வர வேண்டும் என பதட்டத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் சந்தியா சென்ற பேருந்து சரவணன் கண் முன்னே விபத்தில் சிக்கி விடுகிறது.

விபத்து நடந்ததை தெரிந்து கொண்ட குடும்பத்தினர் பதட்டத்தில் இருக்க, சரவணன் சந்தியாவிற்கு என்ன நடந்தது என தெரியாமல் கதறி அழுது சந்தியாவை தேடுகிறார். பின் சந்தியா ஒரு பையனை தூக்கிக் கொண்டு காப்பாற்றுங்கள் என சொல்லி அழுக, சரவணனும் சந்தியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். அடுத்த வாரம் நடைபெற உள்ள எபிசோட் குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

ஐஸ்வர்யாவை துரத்தும் கஸ்தூரி, இறுதி சடங்குகள் நடத்தும் அண்ணன்கள் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அதில் சந்தியாவும் சரவணனும் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கே சிவகாமி சாமி அறையில் அமர்ந்து வருத்தத்தில் இருக்கிறார். சரவணனும் சந்தியாவும் வருவதை பார்த்து, மயில் சொல்ல சிவகாமி வேகமாக எழுந்து வருகிறார். சரவணனும் சந்தியாவும் அழுக்கு உடையில் இருக்கின்றனர். அப்போது சிவகாமி வந்து சந்தியாவை கட்டி தழுவி உன் மீது எந்த தவறும் இல்லை என்பதை இப்போது தான் நான் புரிந்து கொண்டேன் என சொல்கிறார்.

லட்சுமிக்கு சமைத்து கொடுத்ததால் கோவத்தில் பாரதி, வெண்பாவை வர வைத்து வெறுப்பேத்த திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

இன்னொரு பக்கம் சந்தியாவிற்கு அவரது அம்மாவை பார்ப்பது போல ஞாபகம் வருகிறது. சிவகாமி சந்தியா சரவணன் கையை பிடித்து உள்ளே வரும்படி சொல்கிறார். சாமிக்கு ரொம்ப நன்றி என சொல்லி, இருவருக்கும் விபூதி பூசி விடுகின்றனர். அவர் பயங்கரமாக அழுக அதான் நாங்க வந்துட்டோம்ல அப்பறம் ஏன் அழுகிறீர்கள் என கேட்கிறார். அது இல்லடா உங்க இருவருக்கும் என்ன பிரச்சனை என சிவகாமி கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!