TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? தேர்வாணையம் பதில்!

0
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? தேர்வாணையம் பதில்!
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? தேர்வாணையம் பதில்!
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? தேர்வாணையம் பதில்!

தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் tnpsc குரூப் 4 தேர்வுகள் நேற்று ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் சுமார் மொத்தம் 22 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில் நேற்று 18 லட்சம் பேர்கள் தேர்வை எழுதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு அக்டோபர் மாதத்தில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு:

தமிழகத்தில் கடந்த 2 வருட காலமாக கொரோனா பரவலின் காரணமாக எந்த விதமான போட்டித் தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் போட்டித் தேர்வுக்கு தயாராகிய மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டது. அதன்படி, தற்போது கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் போட்டி தேர்வுகளுக்கான அறிவிக்கைகள் தெரிவிக்கப்பட்டு, முன்னதாக குரூப் 2 தேர்வு நடத்தி முடிக்கப் பட்டது. அதனைத்தொடர்ந்து, குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை பெறப்பட்டன. இரண்டு வருடமாக போட்டித் தேர்வுகள் ஏதும் நடத்தப்படாததால் குரூப் 4 தேர்வை எழுத அதிக எண்ணிக்கையிலானவர்கள் காத்திருந்தனர்.

Exams Daily Mobile App Download

இதில் குறிப்பாக பெண்கள் 12,67,457 பேர், ஆண்கள் 9,35,354 பேர், மூன்றாம் பாலினத்தவர் 131 பேர், 27,449 மாற்றுத்திறனாளிகள், 12,644 பேர் ஆதவற்ற பெண்கள், 6,635 முன்னாள் படைவீரர்கள் என மொத்தம் 22 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த எழுத்து தேர்வில் நேற்று 18 லட்சம் பேர் கலந்து கொண்டு உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் காலியிடங்களான 7331 பதவிகளுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்தால் ஒரு பதவிக்கு 253 பேர் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு நேற்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 வரை நடைபெற்றது.

தமிழக தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு குறைபாடு? கல்வித்துறை முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் குரூப் 4 பதவிக்கு அதிகமான பேர் விண்ணப்பித்து எழுதியது இதுவே முதல் முறையாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Download TNPSC Group 4 Answer Key 2022 Pdf
Download TNPSC Group 4 Cutoff Marks 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!