தமிழகத்தில் மாதந்தோறும் செலுத்தும் மின் கணக்கீடு திட்டம் எப்போது? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்கும் முறை எப்போது நடைமுறைக்கு வரும் என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
மின் கணக்கீடு:
இந்தியாவில் வளர்ந்து வரும் துறைகளில் மிகவும் இன்றியமையாதது மின்சாரத்துறை ஆகும். மின்சாரத்தின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்வதால் தமிழ்நாடு அரசு பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டு உள்ள மின் கட்டணம் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சென்னை புளியந்தோப்பில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து கீழ்கண்ட தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அதாவது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில் தற்போது 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. தற்போது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிலையில் மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்க வேண்டும் என்றால் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் புதிதாக ஆட்கள் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
TNPSC தேர்வு மையங்களில் மாற்றம் – கள்ளக்குறிச்சி கலவரம் எதிரொலி!
மின்மாற்றிகளுக்கும் சேர்த்து மீட்டர் பொருத்துவது தொடர்பாக சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு டெண்டர் நிலையில் உள்ளது. அதே போல் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் கணக்கெடுக்கும் பணியாளர்களின் வேலை கேள்விக்குறி ஆகிவிடும் என்றும் எனவே எதாவது ஒரு திட்டம் மட்டும் கொண்டு வர முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப் பட்டவுடன் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மாதந்தோறும் மின் கணக்கீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.