PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு 16வது தவணை பணம் எப்போது? முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
PM கிசான் திட்டத்தின் 16வது தவணைக்கான பணம் எப்போது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
PM கிசான்:
இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டத்தின் மூலமாக வருடத்திற்கு மூன்று தவணைகளில் ரூ. 6000 பணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரையிலும் விவசாயிகளுக்கு 15 தவணைக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், PM கிசான் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ. 8000 ஆக உயர்த்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விவசாயிகள் 16வது தவணைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ. 20 லட்சம் பெறலாம் – போஸ்ட் ஆஃபீஸின் அருமையான திட்டம்!!
கடந்த நவம்பர் 15ஆம் தேதி PM கிசான் திட்டத்திற்கான 15வது தவணை பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில் தற்போது 16வது தவணைக்கான பணம் எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பிஎம் கிசான் திட்ட விவசாயிகளுக்கு 16வது தவணைக்கான பணம் பிப்ரவரி 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை பெறுவதற்கு விவசாயிகள் கட்டாயமாக KYC முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேஒய்சி முடிக்காத விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.