10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு எப்போது? அரசு விளக்கம்!

0
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு எப்போது? அரசு விளக்கம்!
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு எப்போது? அரசு விளக்கம்!
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு எப்போது? அரசு விளக்கம்!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடைபெற இருக்கிறது. துணைத்தேர்வு எந்தெந்த தேதியில் நடைபெற இருக்கிறது, எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்தான முழு விளக்கமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

துணைத்தேர்வு:

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. மேலும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருக்கிறது. பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்கள் மற்றும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கூடிய விரைவிலேயே மறுத்தேர்வு வைக்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது துணைத் தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் பொதுத் தேர்வு எழுத வராதவர்கள், தனித்தேர்வர்களுக்கு வரும் ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையிலும் துணைத் தேர்வு நடத்த உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. துணைத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று முதல் வரும் ஜூலை 4-ஆம் தேதி வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாங்கள் படித்த பள்ளியிலேயே சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BE முடித்தோருக்கு ரூ.75,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

ஜூலை 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்காதவர்கள் ஜூலை 5-ஆம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியாகி இருக்கும் நிலையில் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத் தேர்வு மற்றும் தேர்விற்கான அட்டவணை மற்றும் விதிமுறைகளை www.dge.tn.gov.in என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!