‘குக் வித் கோமாளி’ செஃப் வெங்கடேஷுக்காக ஷிவாங்கி செய்த காரியம் – ட்ரோலுக்கு பதிலடி! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
கடந்த வாரம் வெளியான ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியின் போது செப் வெங்கடேஷ் பட் குழந்தை பிறப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி பேசிய நிகழ்வு சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஷிவாங்கி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
குக் வித் கோமாளி
தமிழ் சின்னத்திரையில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. கடந்த 2 சீசன்களாக வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையுள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ள இந்த நிகழ்ச்சியின் 3ம் சீசன் இப்போது 35 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் தர்ஷன், சந்தோஷ், ரோஷினி, அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ், ஸ்ருதிகா உள்ளிட்ட 10 குக்குகள் பங்குபெற்றனர். அதே போல பாலா, மணிமேகலை, ஷிவாங்கிம் ஆகியோருடன் பரத், அதிர்ச்சி அருண் உள்ளிட்ட புதிய கோமாளிகளும் இடம்பிடித்திருந்தனர்.
Exams Daily Mobile App Download
இதுவரை ஸ்வாரசியமும், கலகலப்புமாக வெளியாகி கொண்டிருக்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் கடந்த வார எபிசோடில் சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறி இருந்தது. அதாவது, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை பார்த்து மன அழுத்தத்தில் இருந்து மீண்ட ஒரு பெண் சுமார் 8 ஆண்டுகள் கழித்து, IVF சிகிச்சை பலனளித்து தற்போது கர்ப்பமாக இருப்பதாக செப் வெங்கடேஷ் பட் கூறி இருந்தார். அதே போல தற்கொலை செய்து கொள்ள சென்ற ஒரு பெண் ‘குக் வித் கோமாளி’ ப்ரோமோ பார்த்ததும் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக புகழ் சொல்லி இருந்தார்.
இந்த சம்பவங்களை கேட்டதும் அங்கிருந்தவர்கள் கொஞ்சம் எமோஷனல் ஆனார்கள். இது ஒரு புறம் இருக்க செப் வெங்கடேஷ் பட்டின் கதையை கேட்ட சிலர் சமூக வலைதளங்களில் நெகட்டிவ் ஆன கமெண்டுகளை கொடுத்து வந்தனர். இந்த விமர்சனங்களை கண்ட ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் கோமாளி ஷிவாங்கி, ‘எளிமையாக பேசி விடலாம். எளிதாக விமர்சனங்களை சொல்லலாம். இந்த உலகத்தில் நம்மை சுற்றி 95% நல்ல விஷயங்கள் இருக்கும் போது நாம் இன்னும் நெகட்டிவ் விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நமக்கு என்ன ஆனது’ என்று செப் வெங்கடேஷ் பட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.