உண்மையை உளறிய கோபி, அதிர்ச்சியில் பாக்கியா & குடும்பத்தினர் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வருபவை!

0
உண்மையை உளறிய கோபி, அதிர்ச்சியில் பாக்கியா & குடும்பத்தினர் - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்து வருபவை!
உண்மையை உளறிய கோபி, அதிர்ச்சியில் பாக்கியா & குடும்பத்தினர் - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்து வருபவை!
உண்மையை உளறிய கோபி, அதிர்ச்சியில் பாக்கியா & குடும்பத்தினர் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வருபவை!

விஜய் டிவியில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வார ப்ரோமோவில், கோபி போதையில் ராதிகாவிடம் தனது குடும்பம் பற்றிய உண்மையை உளறியுள்ளார். இதனால், இந்த வார ப்ரோமோவில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் முன்னணி சீரியலில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. தொடரின் கதையின் படி ,கோபி தனது மனைவி பாக்கியாவிற்கு தெரியாமல் தனது முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்துகொள்ள பல திட்டம் போட்டு வருகிறார். இதுவரை பாக்கியவிடமும், ராதிகாவிடமும் கோபி மாட்டாமல் தப்பித்து கொண்டு உள்ளார். கடந்த வாரம் பாக்கியலட்சுமி – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களின் மெகா சங்கமத்தில், கோபி வீட்டுக்கு உறவினர்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வருகை புரிந்தனர். அப்போது, மூர்த்தி – தனம் தம்பதியருக்கு கோபி செய்யும் கேடித்தனம் தெரிந்துவிட்டது.

Exams Daily Mobile App Download

இதனால் பாக்கியாவின் வாழ்க்கையை காப்பற்ற வேண்டும் நோக்கில் , ராதிகாவின் வீட்டிற்கு சென்று ராதிகாவிடம் கோபியை நம்பாதீர்கள் என்று கூறி விட்டு செல்கிறார். ராதிகா, கோபியிடம் உங்கள் குடும்பத்தைப் பார்க்க வேண்டும், உங்கள் வீட்டுக்கு என்னை அழைத்து செல்லுங்கள் என்று வற்புறுத்துகிறாள். ஆனால், கோபி, தனது இந்த காதல் விவகாரம் எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்று பயப்படுகிறார். கோபி, ராதிகாவை தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வாரா, என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது கதையின் திருப்பமாக அமையும் அதிர்ச்சி ப்ரோமோ ஓன்று வெளியாகியுள்ளது. அதில், கோபி போதையில் ராதிகாவிடம் தனது குடும்பம் பற்றிய உண்மையை கூறுகிறார்.

மது போதையில் ராதிகாவிடம் உண்மையை சொன்ன கோபி, கோவத்தில் வெளியே தள்ளிய ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

மேலும், தனது செல்போனில் பாக்கியவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை காட்டி இவள்தான் எனது மனைவி பாக்யா, என்று கூறுகிறார். ராதிகா பாக்யாவுடன் கோபி இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து இது டீச்சர் என்று கூறி அதிர்ச்சி அடைகிறார். அதற்கு கோபி, ஆமா உன் பெஸ்ட் ப்ரெண்ட் தான் என் மனைவி என கூற அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விடுகிறார் ராதிகா. இதை அடுத்து ராதிகா, பாக்கியவிடம் எல்லா உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்க முடிவு எடுப்பாரா, இல்லை கோபி மேலும் மேலும் பொய் சொல்லி ராதிகாவை திருமணம் செய்து கொள்வாரா என பல யூகங்களில் இணையத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ராதிகா என்ன முடிவெடுப்பார் அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!