TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம்? வலுக்கும் கோரிக்கை! TRB முடிவு என்ன?
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு கடைசி ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை அதனால் இன்னும் ஒரு வாரம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
TNTET:
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் கடந்த இரு ஆண்டுகளாக தலைதூக்கி இருந்தது. இந்நிலையில் சென்ற 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து இருந்தது. மேலும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்கான தேதியும் தெரிவித்து உள்ளது அரசு. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று இருந்த காரணத்தால் கடந்த இரு ஆண்டுகளாக அரசு தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வராமல் இருந்த நிலையில் தற்போது சமீபத்தில் tnpsc குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அடுத்தாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளது. இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்குக்கான தேதியை கடந்த 7ஆம் தேதி வெளியிட்டது தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம். இது பிளஸ் 12 மற்றும் பி. எட் படித்து முடித்த மாணவ மாணவிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது முடிந்து இருக்க வேண்டும். ஆனால் அதிகபட்ச வயது வரம்பு தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொதுப்பிரிவினர், எம்பிசி , பி சி பிரிவினருக்கு ரூ 500 என்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ 250 என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த தேர்வுகள் தாள் 1 ஜூன் 27 ஆம் தேதி அன்றும், தாள் 2 ஜூன் 28 ஆம் தேதி அன்றும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முறையாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
சொகுசு காரில் மகனை அழைத்து வந்த ஆல்யா – உற்சாக மிகுதியில் ஆடிய ஐலா! வைரலாகும் வீடியோ!
இந்நிலையில் சென்ற 13 ஆம் தேதி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி முடிந்த நிலையில் தற்போது பலர் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கும் காரணத்தால் இன்னும் ஒரு வாரம் இதற்க்கு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பட்டதாரிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது, பாமக இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, சென்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 7 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்த நிலையில், இம்முறை சுமார் 4 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதுவரை விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க வசதியாக நாளை 18 ஆம் தேதி முதல் இரு வாரம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு வலியறுத்தியுள்ளார்.