TCS, Wipro & காக்னிசண்ட் நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH? ஆய்வு தகவல்!
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான TCS, விப்ரோ மற்றும் காக்னிசண்ட் ஆகியவை WHF முறையை முடிவுக்கு கொண்டு வந்து, தங்களது ஊழியர்களை அலுவலகம் வரவழைக்க திட்டமிட்டு வருவதாக சில அறிக்கைகள் தகவல் அளித்துள்ளது.
WHF முடிவு
நாடு முழுவதும் கொரோனா 3ம் அலைத்தாக்கம் குறைந்து வரும் சூழலில், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு, மீண்டுமாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. அந்த வகையில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு துறைகள் வழக்கமான பணிகளை துவங்குவதற்காக தங்களது நிறுவன ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைத்து வருகிறது. அது போல, முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களையும் மீண்டும் அலுவலகம் வரவழைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – அரசு முக்கிய அறிவிப்பு!
இது தொடர்பாக வெளியான அறிக்கையின் படி, இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை படிப்படியாக அலுவலகத்திற்கு திரும்ப வரவழைக்க தயாராகி வருகின்றன. இதற்கு முன்னதாக கொரோனா 2ம் அலைப்பரவல் குறைந்து வந்ததை முன்னிட்டு செப்டம்பர் முதல் அலுவலகங்களை திறக்க முடிவு செய்த நிறுவனங்கள், ஒமிக்ரான் அச்சம் காரணமாக இந்த முடிவை ஒத்தி வைத்தது. அந்த வகையில் இப்போது நாடு முழுவதும் கொரோனா 3ம் அலைப்பரவல் பாதிப்புகள் வெகுவாக குறைந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு தற்போது டிசிஎஸ், விப்ரோ, காக்னிசண்ட் மற்றும் இன்போசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது, விப்ரோ நிறுவனம் 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்துள்ள உயர் அதிகாரிகளை, மார்ச் 3 முதல் அலுவலகத்திற்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊழியர்கள் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும், மற்ற நாட்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்றும் ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிப்பு!
அதே போல காக்னிசண்ட் நிறுவனமும், ஏப்ரல் மாதத்தில் இருந்து அலுவலகத்தை திறக்க இருப்பதாகவும் விருப்பமுள்ளவர்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றலாம் எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள் அதன் ஊழியர்களை WFH முறை அல்லது அலுவலகம் வரவழைக்கப்படுவது உள்ளிட்ட ஹைபிரிட் மாடலில் பணிபுரிய அனுமதிக்கலாம் என தெரிகிறது. இதன் மூலம் IT நிறுவன ஊழியர்கள் விரைவில் அலுவலகம் திரும்ப வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு தகவல்கள் கூறுகிறது.