மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். கடந்த ஜனவரி மாதமே அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
DA உயர்வு:
கொரோனா என்ற பெருந்தொற்றால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து துறைகளும் முடக்கப்பட்டது. இதனால் அரசுக்கு அதிகமான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தற்போது நிலைமை சீராகி வருவதால் மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட காலத்திற்கு நஷ்ட ஈடாகவும் DA அளவீட்டை பெரிய அளவில் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 25 முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து? அரசு ஆலோசனை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது வரை உயர்த்தி வழங்கி வரும் அகவிலைப்படி 31% ஆகும். இந்த நிலையில் மத்திய அரசு, மீண்டும் அரசு ஊழியர்களுக்கான DA அளவீட்டை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா காலகட்டத்தில் இருந்து விலைவாசி உயர்வு அதிகரித்து வருவதால், மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் DA உயர்வு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) ஜனவரி மற்றும் ஜூலை என ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை புதுப்பிக்கப்படுகிறது.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – சேரப்போகும் பாரதி, கண்ணம்மா & ஹேமா!
மேலும் நடப்பு ஆண்டிற்கான அகவிலைப்படி (DA) கணக்கீட்டில் 3% உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) அளவு 34 சதவீதமாக உயரும் என்று ஊழியர்கள் சார்பில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கொரோனா காலகட்டத்திற்கு பின்பு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு மூலம் ஊழியர்களின் சம்பள உயர்வும் அதிகரித்தது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி “அகவிலைப்படி சதவீதம் = ((கடந்த 12 மாதங்களில் AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) -115.76)/115.76) x 100 ” என்ற பார்முலா வைத்து தான் கணக்கிடப்படுகிறது