Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – அரசு முக்கிய அறிவிப்பு!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இதில் பெண் குழந்தைகளுக்காக சேமிக்க சிறந்த திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதிய சேமிப்பு திட்டம்
தமிழக அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செல்வமகள் சேமிப்பு திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கை தொடங்க முடியும். அத்துடன் இதில் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகள் வரை சேமிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.
மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல், பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அதிரடி உத்தரவு!
அத்துடன் இந்த திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 150000 லட்ச ரூபாய் வரை செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வரை வட்டி விகிதம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் கணக்கை தொடங்க குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டையை பயன்படுத்தி அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும். இதில் கிடைக்கும் முதிர்வுத் தொகைக்கு வரி சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் இதில் வங்கிகளில் கொடுக்கப்படும் வட்டி விகிதத்தை விட அதிகமாக வழங்கப்படுகிறது.
மாநிலத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு திடீர் விளக்கம்!
இந்த திட்டத்தில் மாதத்திற்கு 1000 ரூபாய் செலுத்தினால் முதிர்வு காலம் முடியும் போது வட்டியுடன் சேர்த்து ரூ.5.09 லட்சம் சேமிக்க முடிகிறது. இதில் முதிர்வு காலம் முடிவடையும் முன் மதிப்பு தொகையில் இருந்து 50% வைப்புத் தொகையை பெண் குழந்தையின் மேற்படிப்பிற்காக பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் திருமணத்தின் போது அல்லது 21 வருடங்கள் முடியும் போது முதிர்வு தொகையை முழுவதுமாக பெற முடியும். அத்துடன் முதிர்வு காலம் முடிவடையும் போது தங்கள் சேமிப்பு தொகையில் இருந்து 3 மடங்கு தொகையை பெற முடிகிறது.